Monday, January 7, 2013

மழை வாசனை..




பெருமழை
சிறு தூறலாகும்
தருணம்
நிறைகிறது குளம்
நனைகிறது மனது..

பசித்த வயிற்றுக்கு
மண் வாசனைதான்
எத்தனை இதம்..

மிதமான மழை
விசாலமான முற்றம்
உருண்டு புணர்கையில்
எண்ண முடிகிறது
நீர்த்துளிகளை
உணர்ந்து…

முதல் துளியை
ருசிப்பது போல்
இருந்தது
நா உணர்கிறது
முலைப்பாலின்
அடர்வை…

Saturday, December 15, 2012

சில...







ஒரு வார்த்தை
ஒரு பார்வை
வேண்டாம்..
இருக்கிறாய் என்பதை
உணர்த்து!!

எப்போதும் போல்
அவள்தான் ஜெயிக்கிறாள்
நான் நடித்துக்கொண்டிருக்கிறேன்
தோற்றவன் போல்
எப்போதும்!!

பிள்ளையார் சுழியிட்டு
எதுவுமே எழுதப்படாத
காகிதம் போல்
இருக்கிறது மனது!!


உன்னை எப்போது பிடிக்கிறது
என்று சொல்ல முடியவில்லை
என்னை எப்போதெல்லாம்
பிடிக்கிறதோ
அப்போதெல்லாம் உன்னையும்
பிடிக்கிறது!!

Friday, March 30, 2012

தேடல்களின் துவக்கம்

இங்குதான் முதலில் தேடத்துவங்கினேன்
மீண்டும் இங்கேயே தேடத்தொடர்கிறேன்
இங்குதான் தொலைந்தது
இங்குதான் இருக்க வேண்டும்